Saturday, February 6, 2010

கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி முகாம்


31-01-2010 அன்று காலை 10.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆ.நெ.பள்ளியில் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 10th, 12th மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐ. இளங்கோ தலைமை தாங்கினார்.

கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். முஹம்மது பைசல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். முஹம்மது லெப்பை தம்பி அவர்கள் முன்னிலையில் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் Z.முஹம்மது தம்பி அவர்களும் ஆசிரியர் ஏ. மஹபூப் அலி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக PM. காதர் முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் MS.முஹம்மது அம்ஜத் கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் வழிமுறைகள் விளக்கியதோடு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Monday, January 11, 2010

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலைகண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்





கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியா மாணவர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலை கண்டித்து சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஷாகுல், பொதுச்செயலாளர் செய்யது அலி அசாருத்தீன், துணை தலைவர் டாக்டர். அப்துர் ரஹ்மான், செயலாளர் முஹம்மது தம்பி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


தீர்மானங்கள்:

1.ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

2.தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.

3.ஆஸ்திரேலிய அரசு இனவெறி தொடர்பான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

4.படுகொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்க்கு ஆஸ்திரேலிய அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

5.மேற்கண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்களுக்கான ஒரு புதிய சமூக இயக்கம். புதிய தலைமுறை செயல்வீரர்களை உருவாக்கி அதன் மூலம் கல்வி நிறுவனங்களை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்தல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுதல் மற்றும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் மூலம் கல்வி நிறுவனங்களில் ஒரு புதிய விடியலை உருவாக்கும் பணிகள் ஆகியவற்றில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னணியில் நிற்கும். நாட்டின் பல பாகங்களில் செயல்பட்டு வந்த மாணவர் இயக்கங்களிடையே நடைபெற்று வந்த தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக உருவாக்கப்பட்டது தான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

சமூகத்தை கட்டியமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். கல்வி, தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவு ஆகிய சக்திகளை பெற்றவர்கள் மாணவர்கள். சமூகத்தில் ஒடுக்கப்பற்ற மக்களுக்கு இவை அனைத்தும் மறுக்கப்படுகின்றன. துரதிஷ்டசமாக கடந்த சில வருடங்களாக மாணவர்களிடையே ஆக்கப்பூர்வான செயல்பாடுகள் குறைந்து வருவதை நாம் கண்டு வருகிறோம். ஒரு காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக கருத்தப்பட்ட மாணவர் இயக்கங்கள் இன்று அவை சார்ந்த அரசியல் கட்சிகளிடம் தஞ்சமடைந்து விட்டன. இக்கட்டான இச்சூழலில் மாணவர் சக்தியை உயிருட்டுவதற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முயற்சி செய்யும். மேலும் சமூக இயக்கங்களை முன்னெடுத்து செல்வதற்கான உந்துதலையும் மாணவர்களுக்கு அளிக்கும்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நவம்பரில் 7,2009 அன்று புதுடில்லியில் உள்ள இந்தியா சர்வதேச அரங்கில் (India Internatiional Center) நடைபெற்ற தேசிய மாணவர்கள் கூட்டதில் அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்பட்டது. பல்வெறு மாநில நிர்வாகிகள் இக்கூட்டதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டதில் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.எம். அப்துர்ரஹ்மான், சோஷியயல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் ஏ.சயீது, Economic and Political Weekly கட்டுரையாளர் கவுதம் நவ்லாக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதிய அமர்வில் 'சமூக மாற்றத்தில் மாணவர்கள்' என்ற தலைபில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேஜஸ் நாளிதழின் பேராசிரியர் P. கோயா, டில்லி பல்கலைகழக பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் தனிக்கா சர்க்கார் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் சந்திப் சிங் மற்றும் எஸ்.ஏ.ஆர். ஜீலானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்