Saturday, February 6, 2010

கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி முகாம்


31-01-2010 அன்று காலை 10.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆ.நெ.பள்ளியில் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 10th, 12th மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐ. இளங்கோ தலைமை தாங்கினார்.

கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். முஹம்மது பைசல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். முஹம்மது லெப்பை தம்பி அவர்கள் முன்னிலையில் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் Z.முஹம்மது தம்பி அவர்களும் ஆசிரியர் ஏ. மஹபூப் அலி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக PM. காதர் முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் MS.முஹம்மது அம்ஜத் கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் வழிமுறைகள் விளக்கியதோடு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.